அந்த ஸ்திரீயை நோக்கி: உன் சொல்லினிமித்தம் அல்ல, அவருடைய உபதேசத்தை நாங்களே கேட்டு, அவர் மெய்யாய்க் கிறிஸ்துவாகிய உலகஇரட்சகர் என்று அறிந்து விசுவாசிக்கிறோம் என்றார்கள். (யோவான் 4:42)

October 22, 2018

இஸ்லாமிய வணக்க வழிபாடுகள் எங்கேயிருந்து வந்தன?

இஸ்லாமிய வணக்க வழிபாடுகள் எங்கேயிருந்து வந்தன?

ஒரு நாளைக்கு ஐந்து வேளை தொழ‌வேண்டும் என்று ஆதாம், நூஹ், இப்ராஹிம்,
மூஸா, தாவூத், சுலைமான், யஹ்யா மற்றும் வேறு எந்த ஒரு
தீர்க்கதரிசிக்கும் இறைவன் கட்டளை இடவில்லை.

இறைவனை தொழுதுக்கொள்ளும் போது, உளு (முஸ்லிம்கள் செய்வது போல‌)
செய்யுங்கள் என்று ஆதாம், நூஹ், இப்ராஹிம், மூஸா, தாவூத், சுலைமான்,
யஹ்யா மற்றும் வேறு எந்த ஒரு தீர்க்கதரிசிக்கும் இறைவன் கட்டளை இடவில்லை.

நீங்கள் ஷஹதா சொல்லுங்கள் என்று ஆதாம், நூஹ், இப்ராஹிம், மூஸா, தாவூத்,
சுலைமான், யஹ்யா மற்றும் வேறு எந்த ஒரு தீர்க்கதரிசிக்கும் இறைவன் கட்டளை
இடவில்லை.

ரமளான் நோன்பு 30 நாட்கள் கட்டாயம் கடைபிடிக்கவேண்டும் என்று ஆதாம்,
நூஹ், இப்ராஹிம், மூஸா, தாவூத், சுலைமான், யஹ்யா மற்றும் வேறு எந்த ஒரு
தீர்க்கதரிசிக்கும் இறைவன் கட்டளை இடவில்லை.

வெள்ளை ஆடையை அணிந்துக்கொண்டு ஒரு கருப்புக்கல்லை இத்தனை முறை
சுற்றிவரவேண்டும் என்று ஆதாம், நூஹ், இப்ராஹிம், மூஸா, தாவூத்,
சுலைமான், யஹ்யா மற்றும் வேறு எந்த ஒரு தீர்க்கதரிசிக்கும் இறைவன்
கட்டளை இடவில்லை.

இப்படி பல இஸ்லாமிய வழிபாட்டு முறைகளை பட்டியல் இடமுடியும். ஒன்றை
இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன். ஒரு மிகப்பெரிய நபி என்று
முஸ்லிம்கள் நம்பும், இயேசுக் கிறிஸ்து கூட, இவைகளில் எந்த ஒரு முறையை
கூட செய்யவேண்டும் என்று கற்றுக் கொடுத்ததில்லை மற்றும் போதித்ததில்லை.

இப்படி முந்தைய தீர்க்கதரிசிகள் யாருமே செய்யாத இந்த வணக்க வழிபாடுகள்
எங்கேயிருந்து வந்து, இஸ்லாமில் புகுந்து, சட்டமாக மாறிவிட்டன‌?

பதில்: ஸாபியீன்கள் என்பவர்களிடமிருந்து தான் இவைகள் வந்து, இஸ்லாமின்
சட்டமாக மாறிவிட்டன‌.

யார் இந்த ஸாபியீன்கள்(Sabians):

ஸாபியீன்கள் என்பவர்கள் கி.பி. இரண்டாம் நூற்றாண்டு காலகட்டத்திலிருந்து
சந்திர கடவுளை வணங்கும் விக்கிர ஆராதனை செய்பவர்களாக‌ இருந்தார்கள்.
இவர்களின் வழிப்பாட்டு முறையினால் முஹம்மது அதிகமாக ஈர்க்கப்பட்டார்,
மேலும் குர்‍ஆனிலும் இவர்கள் பற்றிய குறிப்பு சேர்க்கப்பட்டுள்ளது.
அதாவது குர்‍ஆன் 2:62ன் படி, இவர்களை அல்லாஹ் அங்கீகரித்துள்ளான்.

2:62. ஈமான் கொண்டவர்களாயினும், யூதர்களாயினும், கிறிஸ்தவர்களாயினும்,
ஸாபியீன்களாயினும் நிச்சயமாக எவர் அல்லாஹ்வின் மீதும், இறுதி நாள் மீதும்
நம்பிக்கை கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்கிறார்களோ அவர்களின் (நற்)
கூலி நிச்சயமாக அவர்களுடைய இறைவனிடம் இருக்கிறது; மேலும், அவர்களுக்கு
யாதொரு பயமும் இல்லை; அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள். (முஹம்மது ஜான்
தமிழாக்கம்).

டாக்டர் ரஃபர் அமரி(Dr Rafat Amari [1]) என்பவரின் "Occultism in the
Family of Muhammad" என்ற ஆய்வுக் கட்டுரையின்படி, வராகா என்பவர் இந்த
ஸாபியீன்களின் தலைவர் ஆவார். ஆம், இந்த வராகா (கதிஜாவின் உறவினர்) தான்
முஹம்மது ஒரு நபி என்றுச் சொல்லி, அவரை சம்மதிக்கவைத்தவர். முஹம்மது
ஆரம்பநாட்களில் யாரால் ஈர்க்கப்பட்டு இருந்தார் என்பதை இப்போது
புரிந்திருக்கும்.

இப்னு அல்நதீம்(Ibn al-Nadim) தம்முடைய "அல் ஃபஹ்ரிஸிட் - al-Fahrisit"
என்ற புத்தகத்தில், மத்திய கிழக்கு நாடுகளில் பல மத பிரிவுகள்
அக்காலத்தில் இருந்ததாக கூறுகிறார். அவரின் கூற்றின் படி, ஸாபியீன்கள்
ஒரு குறிப்பிட்ட மாதத்தில் 30 நாட்கள் நோன்பு இருப்பார்கள். அவர்களது
சந்திர கடவுளான "சின்"ஐ கனப்படுத்த இப்படி நோன்பு இருப்பார்கள்.

இந்த ஸாபியீன்கள் ஃபித்ர்(Fitr) என்ற பண்டிகையை அனுசரிப்பார்கள் மேலும்
ஹிலல் என்ற புது பிறை நாளையும் அனுசரிப்பார்கள். இதனை அவர்கள் மக்காவின்
இறைவீட்டை (காபா) கனப்படுத்த செய்வார்கள்.

டாக்டர் ரஃபர் அமரியின் படி, ஸாபியீன்கள் யெமன் நாட்டு திசையை நோக்கி
(கிப்லா), தினமும் ஐந்து வேளை தொழுகை புரிகின்றனர். அக்காலத்தில் இதர மத
பிரிவுகளில் காணப்பட்ட இப்படிப்பட்ட மத சடங்காச்சாரங்களை தான் முஹம்மது
புதிதாக உருவாக்கிய மதத்தில் புகுத்திவிட்டார், இவைகள் அல்லாஹ்வினால்
கட்டளையிடப்பட்டன என்று சொல்லிவிட்டார்.

அவ்வளவு ஏன், முஸ்லிம்கள் கூறும் விசுவாச அறிக்கையாகிய‌ ஷஹதா கூட,
ஸாபியீன்களிடமிருந்து எடுத்துக் கொண்டதுதான்.

இஸ்லாமிய அறிஞர் அப்த் அல் ரஹ்மான் இப்னு ஜைத் (Abd al-Rahman Ibn Zayd)
கி.பி. எட்டாம் நூற்றாண்டில் இப்படி எழுதுகிறார்: பல தெய்வ பழிப்பாட்டு
மக்கள், இறைத்தூதர் மற்றும் அவரது சஹாபாக்களைப் பார்த்து, "இவர்கள்
ஸாபியீன்கள்" என்று கூறினார்கள், ஏனென்றால், ஈராக்கில் வாழ்ந்துக்கொண்டு
இருந்த ஸாபியீன்கள் கூட "லா இலாஹா இலா அல்லாஹ்" என்றே கூறிக் கொண்டு
இருந்தார்கள்.

இதர இஸ்லாமிய மத சட்டங்களான‌, உளூ செய்வது, மிஸ்வாக் பயன்படுத்துவது,
கஜல் செய்து சுத்தம் செய்வது போன்றவை ஜொராஷ்ட்ரியம் (Zoroastrianism)
என்ற மத பிரிவிலிருந்து வந்தவைகளாகும்.

இஸ்லாமின் முக்கிய வணக்க வழிபாடுகள் எங்கேயிருந்து வந்தன என்பது இப்போது
புரிந்திருக்கும்.

அடிக்குறிப்புக்கள்:

[1] https://www.goodreads.com/author/show/708864.Rafat_Amari

மூலம்: http://www.faithbrowser.com/where-do-islamic-rituals-come-from/

________________________________

ஃபெயித் ப்ரவுசர் தள இதர கட்டுரைகள்

உமரின் கட்டுரைகள் பக்கம்
http://isakoran.blogspot.com/2018/10/blog-post.html

Source : http://isakoran.blogspot.in/

ஷைத்தானின் புண்ணியத்தினால் ஆயத்துல் குர்ஸியை முஸ்லிம்கள் (ஷைத்தானை துரத்த‌) ஓதிக்கொண்டு இருக்கிறார்கள்!

ஷைத்தானிடமிருந்து பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காக ஆயத்துல் குர்ஸி[1]
என்ற ஒரு குர்ஆன் வசனத்தை முஸ்லிம்கள் ஓதுகிறார்கள்.

முஸ்லிம்களே! இந்த வசனத்தை ஓதினால் ஷைத்தானிடமிருந்து பாதுகாப்பு
கிடைக்குமென்று உங்களுக்கு கற்றுக் கொடுத்தவன் யார் என்று சிந்தித்து
பார்த்து இருக்கின்றீர்களா? சரி, இப்போதாவது அதனை அறிந்துக்கொள்வோம்.

ஆயத்துல் குர்ஸியை ஓதினால், ஷைத்தான் நெருங்கமாட்டான் என்று
கற்றுக்கொடுத்தவன் யார்?

அல்லாஹ் கற்றுக்கொடுத்தானா - இல்லை!

முஹம்மது கற்றுக்கொடுத்தாரா - இல்லை!

அப்படியானால் இதனை கற்றுக் கொடுத்தவர் யார்?

இதனை கற்றுக் கொடுத்தவன் ஷைத்தான் ஆவான்! ஆம் அவன் தான்
கற்றுக்கொடுத்தான். மேலும் முஹம்மது அதனை அங்கீகரித்தும் இருக்கிறார்
என்பதை அறியும் போது, மனது உண்மையாகவே வலிக்கிறது.

சஹீஹ் புகாரி ஹதீஸ் தொகுப்பில் பதிவு செய்யப்பட்ட இந்த நிகழ்ச்சியை
படித்துப் பாருங்கள், அப்போது தான் உண்மை உங்களுக்கே புரியும்.

நூல்: புகாரி ஹதீஸ், எண்: 5010

5010. முஹம்மத் இப்னு சீரீன்(ரஹ்) அறிவித்தார்

அபூ ஹுரைரா(ரலி), 'இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ரமளானின் (ஃபித்ரா) ஸகாத்தைப்
பாதுகாக்கும் பொறுப்பை என்னிடம் ஒப்படைத்தார்கள். அப்போது யாரோ ஒருவன்
என்னிடம் வந்து அந்த (ஸகாத்) உணவுப் பொருளை அள்ளலானான். உடனே அவனை நான்
பிடித்து, 'உன்னை இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் கொண்டு செல்லப் போகிறேன்'
என்று சொன்னேன்' என்று கூறிவிட்டு, - அந்த நிகழ்ச்சியை முழுமையாகக்
குறிப்பிட்டார்கள். - (இறுதியில், திருட வந்த) அவன், 'நீங்கள்
படுக்கைக்குச் செல்லும்போது (ஆயத்துல் குர்ஸீ'யை ஓதுங்கள்! (அவ்வாறு
செய்தால்,) விடியும்வரை அல்லாஹ்வின் தரப்பிலிருந்து (உங்களைப்
பாதுகாக்கின்ற) காவலர் (வானவர்) ஒருவர் இருந்துகொண்டேயிருப்பார்; எந்த
ஷைத்தானும் உங்களை நெருங்கமாட்டான்' என்று கூறினான். (இதை நான் நபி(ஸல்)
அவர்களிடம் தெரிவித்தேன்). அப்போது நபியவர்கள், 'அவன் பெரும்
பொய்யானாயிருப்பினும அவன் உம்மிடம் உண்மையாகத்தான் சொல்லியிருக்கிறான்;
(உம்மிடம் வந்த) அவன்தான் ஷைத்தான்' என்று கூறினார்கள் என்றும்
கூறினார்கள். 35

Volume :5 Book :66 (மேலும் பார்க்க புகாரி ஹதீஸ் எண்கள்: 2311 & 3275)

என்ன ஆச்சரியம்!

இந்த நிகழ்ச்சியை நீங்கள் கற்பனை செய்து பார்க்கமுடியுமா?

ஷைத்தான், தன்னை எப்படி விரட்ட வேண்டும் என்று தானே முஸ்லிம்களுக்கு
நேரடியாக‌ சொல்லிக் கொடுக்கின்றானா! இது எப்படி சாத்தியமாகும்? இதுவும்
ஒரு உண்மையான நிகழ்ச்சி என்று நம்பும் அளவிற்கு முஸ்லிம்கள் அறியாமையில்
இருக்கிறார்களா?

ஒரு திருடனின் அறிவுரை:

இதனை கற்பனை செய்துப்பாருங்கள், அதாவது ஒரு திருடன் அல்லது கொலைக்காரன்,
உங்களிடம் குழந்தைகள் விளையாடும் தண்ணீர் பாய்ச்சும் போலி துப்பாக்கியைக்
கொடுத்து, என்னிடமிருந்து உங்களை காப்பாற்ற இந்த ஆயுதம் உதவும். இதனைக்
கொண்டு என்னை சுட்டால், என்னால் உங்களை ஒன்றுமே செய்யமுடியாது. என்னை
நம்புங்கள், நான் உண்மையைச் சொல்கிறேன். இதோ இந்த துப்பாக்கியை உங்கள்
படுக்கையின் பக்கத்தில் வைத்துக்கொண்டு நீங்கள் நிம்மதியாக தூங்கலாம்.
நான் வரும் போது, இதனைக் கொண்டு என்னை சுட்டால் போதும் என்று சொல்கிறான்
என்று வைத்துக்கொள்வோம்.

ஒரு திருடன் இப்படி உங்களிடம் சொன்னால், எப்படி இருக்கும் உங்களுக்கு?
அதனை நீங்கள் நம்புவீர்களா?

இதுமட்டுமல்ல, தன்னை எப்படி விரட்டமுடியும் என்று ஷைத்தான் கொடுத்த
ஆலோசனையை (அல்லது குறுக்குவழியை) அல்லாஹ்வின் இறைத்தூதரான முஹம்மது
அங்கீகரித்தும் விட்டார், என்னே ஆச்சரியம்!

இக்கேள்விகளை சிந்தித்துப்பாருங்கள்:

தன்னை விரட்டும் வழிமுறைகளை முஸ்லிம்களுக்கு ஏன் ஷைத்தான் கற்றுக்கொடுப்பான்?
ஷைத்தான் தனக்கு தானே குழி தோண்டிக்கொள்வான் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?
இப்படி ஷைத்தான் சொன்னான் என்று நம்புவது அறிவுடமையாக இருக்கின்றதா?

சாத்தானைச் சாத்தான் துரத்தினால் தனக்கு விரோதமாகத் தானே பிரிவினை
செய்கிறதாயிருக்குமே; அப்படிச் செய்தால் அவன் ராஜ்யம் எப்படி
நிலைநிற்கும்? (இயேசு - மத்தேயு 12:26),

முஹம்மது கூறிய விவரத்தில் உள்ள லாஜிக்கை பார்த்தீர்களா?

அப்போது நபியவர்கள், 'அவன் பெரும் பொய்யானாயிருப்பினும்

அவன் உம்மிடம் உண்மையாகத்தான் சொல்லியிருக்கிறான்;' (புகாரி எண்: 5010)

இது என்ன ஆச்சர்யம்! ஒரு பெரும் பொய்யன், சொன்னது உண்மையா?

வேடிக்கையாக உள்ளதல்லவா? முஹம்மது அல்லாஹ்வின் இறைத்தூதராக இருப்பதோடு
மட்டுமல்லாமல், ஷைத்தானுக்காக வழக்காடும் வழக்கறிஞராகவும் இருக்கிறாரா
என்ன? என்று கேட்கத் தோன்றுகிறதல்லவா?

ஒருவனைப் பார்த்து, "நீ உலக மகா பொய்யன்" என்ற பட்டத்தை கொடுத்துவிட்ட
பிறகு, "நீ சொன்னதும் உண்மையே" என்றுச் சொன்னால், இப்போது நாம் யாரை
நொந்துக்கொள்வது? அந்த பொய்யனையா (ஷைத்தானையா) அல்லது அவனை
அங்கீகரித்தவரையா (முஹம்மதுவையா)?

அடுத்ததாக, ஷைத்தான் கூறியதையும் கவனியுங்கள்:

அதற்கவன் 'என்னைவிட்டுவிடு! அல்லாஹ் உமக்குப் பயனளிக்கக் கூடிய சில
வார்த்தைகளைக் கற்றுத் தருகிறேன்!' என்றான். (நூல்: புகாரி ஹதீஸ், எண்
2311)

அல்லாஹ் "இந்த‌ நன்மையைச் செய்வான்" என்ற முடிவு எடுக்க ஷைத்தானுக்கு
அதிகாரம் கொடுத்தவன் யார்?
ஷைத்தான் சொல்லிவிட்டானே என்பதற்காக, அதன் படி செய்ய அல்லாஹ்வால்
முடியுமா? அல்லாஹ் ஷைத்தானுக்கு ஏதாவது கடமைப்பட்டுள்ளானா?
அல்லது ஷைத்தான் அல்லாஹ்வோடு சேர்த்து செயல்படும் கூட்டாளியா?

இந்த ஹதீஸ் முழுவதையும் படித்தால், இன்னும் பல தர்மசங்கடமான கேள்விகள்
எழும்புகின்றன, ஆனால், இதோடு என் கேள்விகளை முடித்துக்கொள்கிறேன்.

முஸ்லிம்களே, அடுத்த முறை நீங்கள் ஆயத்துல் குர்ஸியை ஓதும் போது, இதனை
மனதில் நிறுத்திக்கொள்ளுங்கள், அது என்னவென்றால், இந்த ஆயத்தை ஓதினால்,
ஷைத்தான் ஒன்றுமே உங்களை செய்யமுடியாது என்று உங்களுக்கு ஆலோசனை
சொன்னவனே, அதே ஷைத்தான் தான்.

உண்மையைச் சொல்லவேண்டுமென்றால், ஷைத்தான் உங்களை (முஸ்லிம்களை) தெளிவாக
குழப்பி ஏமாற்றியுள்ளான். நீங்கள் என்ன செய்யவேண்டும் என்று அவன்
விரும்பினானோ, அதனைத் தான் நீங்கள் பல நூற்றாண்டுகளாக செய்துக்கொண்டு
இருக்கிறீர்கள், அல்ஹம்துலில்லாஹ்!

அடிக்குறிப்புக்கள்:

1) ஆயத்துல் குர்ஸி என்பது, குர்‍ஆனின் இரண்டாம் அத்தியாயத்தின் 255வது வசனமாகும்.

2:255. அல்லாஹ்-அவனைத்தவிர (வணக்கத்திற்குரிய) நாயன் வேறு இல்லை; அவன்
என்றென்றும் ஜீவித்திருப்பவன்; என்றென்றும் நிலைத்திருப்பவன்; அவனை அரி
துயிலோ, உறக்கமோ பீடிக்கா; வானங்களிலுள்ளவையும், பூமியிலுள்ளவையும்
அவனுக்கே உரியன; அவன் அனுமதியின்றி அவனிடம் யார் பரிந்துரை செய்ய
முடியும்? (படைப்பினங்களுக்கு) முன்னருள்ளவற்றையும், அவற்றுக்குப்
பின்னருள்ளவற்றையும் அவன் நன்கறிவான்; அவன் ஞானத்திலிருந்து எதனையும்,
அவன் நாட்டமின்றி, எவரும் அறிந்துகொள்ள முடியாது; அவனுடைய அரியாசனம்
(குர்ஸிய்யு) வானங்களிலும், பூமியிலும் பரந்து நிற்கின்றது;
அவ்விரண்டையும் காப்பது அவனுக்குச் சிரமத்தை உண்டாக்குவதில்லை - அவன் மிக
உயர்ந்தவன்; மகிமை மிக்கவன். (முஹம்மது ஜான் டிரஸ்ட் தமிழாக்கம்).

2) இந்த நிகழ்ச்சி பற்றி பதிவு செய்யப்பட்ட ஸஹீஹ் புகாரி ஹதீஸ்கள்:

2311. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் ரமளானுடைய (ஃபித்ரா) ஜகாத்தைப் பாதுகாக்கும் பொறுப்பை
என்னிடம் கொடுத்தார்கள். அப்போது ஒருவர் வந்து உணவுப் பொருட்களை
அள்ளலானார். அவரை நான் பிடித்து, 'உன்னை நபி(ஸல்) அவர்களிடம் கொண்டு
செல்லப் போகிறேன்!' என்று கூறினேன். அதற்கவர், 'நான் ஓர் ஏழை!' எனக்குக்
குடும்பம் இருக்கிறது. கடும் தேவையும் இருக்கிறது! என்று கூறினார். அவரை
நான்விட்டு விட்டேன். விடிந்ததும் நபி(ஸல்) அவர்கள், 'அபூ ஹுரைராவே!
நேற்றிரவு உம்மால் பிடிக்கப்பட்டவர் என்ன செய்தான்? என்று
கேட்டார்கள்.நான், 'இறைத்தூதர் அவர்களே! தாம் கடுமையான வறுமையில்
இருப்பதாகவும் தமக்குக் குடும்பம் இருப்பதாகவும் அவர் முறையிட்டார்.
எனவே, இரக்கப்பட்டு அவரைவிட்டு விட்டேன்! என்றேன். அதற்கு நபி(ஸல்)
அவர்கள், 'நிச்சயமாக அவன் பொய் சொல்லியிருக்கிறான்! மீண்டும் அவன்
வருவான்! என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதால் அவன் மீண்டும் வருவான் என்று
நபி(ஸல்) அவர்கள் கூறியதால் அவன் மீண்டும் வருவான் என்று நம்பி
அவனுக்காக(அவனைப் பிடிப்பதற்காக) காத்திருந்தேன். அவன் வந்து உணவுப்
பொருட்களை அள்ளத் தொடங்கியபோது அவனைப் பிடித்தேன். 'உன்னை நபி(ஸல்)
அவர்களிடம் கொண்டு செல்லப் போகிறேன்! என்று கூறினேன். அதற்கவன்,
'என்னைவிட்டுவிடு! நான் ஓர் ஏழை! எனக்குக் குடும்பமிருக்கிறது! இனிநான்
வரமாட்டேன்! என்றான். அவன் மேல் இரக்கப்பட்டு அவனைவிட்டு விட்டேன்.
விடிந்ததும் நபி(ஸல்) அவர்கள் அபூ ஹுரைராவே! உம்மால் பிடிக்கப்பட்டவன்
என்ன செய்தான்! என்று கேட்டார்கள். நான் 'இறைத்தூதர் அவர்களே! அவன்
(தனக்குக்) கடும் தேவையும் குடும்பமும் இருப்பதாக முறையிட்டான்; எனவே,
அவன் மேல் இரக்கப்பட்டு அவனைவிட்டுவிட்டேன்! என்றேன். 'நிச்சயமாக அவன்
உம்மிடம் பொய் சொல்லியிருக்கிறான். திரும்பவும் உம்மிடம் வருவான்!
என்றார்கள். மூன்றாம் முறை அவனுக்காகக் காத்திருந்தபோது,அவன் வந்து உணவு
பொருட்களை அள்ளத் தொடங்கினான். அவனைப் பிடித்து, 'உன்னை நபி(ஸல்)
அவர்களிடம் கொண்டு செல்லப்போகிறேன்! (ஒவ்வொரு முறையும்) 'இனிமேல்
வரமாட்டேன்! என்று செல்லிவிட்டு, மூன்றாம் முறையாக நீ மீண்டும்
வந்திருக்கிறாய்! என்று கூறினேன். அதற்கவன் 'என்னைவிட்டுவிடு! அல்லாஹ்
உமக்குப் பயனளிக்கக் கூடிய சில வார்த்தைகளைக் கற்றுத் தருகிறேன்!'
என்றான். அதற்கு நான் 'அந்த வார்த்தைகள் என்ன? என்று கேட்டேன். 'நீர்
படுக்கைக்குச் செல்லும்போது ஆயத்துல் குர்ஸியை ஆரம்பத்திலிருந்து
கடைசிவரை ஓதும்! அவ்வாறு செய்தால், விடியும் வரை அல்லாஹ்வின்
தரப்பிலிருந்து உம்மைப் பாதுகாக்கிற (வானவர்) ஒருவர் இருந்து
கொண்டேயிருப்பார். ஷைத்தானும் உம்மை நெருங்கமாட்டான்!' என்றான்.
விடிந்ததும் நபி(ஸல்) அவர்கள் 'நேற்றிரவு உம்மால் பிடிக்கப்பட்டவன் என்ன
செய்தான்? என்று கேட்டார்கள். 'இறைத்தூதர் அவர்களே! அல்லாஹ் எனக்குப்
பயனளிக்கக் கூடிய சில வார்த்தைகளைக் கற்றுத் தருவதாக அவன் கூறினான்;
அதனால் அவனைவிட்டு விட்டேன்!' என்றேன். 'அந்த வார்த்தைகள் என்ன? என்று
நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். 'நீர் படுக்கைக்குச் செல்லும்போது
ஆயத்துல் குர்சியை ஆரம்பம் முதல் கடைசிவரை ஓதும்! அவ்வாறு ஓதினால்,
விடியும் வரை அல்லாஹ்வின் தரப்பிலிருந்து உம்மைப் பாதுகாக்கிற (வானவர்)
ஒருவர் இருந்துகொண்டேயிருப்பார். ஷைத்தானும் உம்மை நெருங்கமாட்டான்!
என்று என்னிடம் அவன் கூறினான்' எனத் தெரிவித்தேன். நபித்தோழர்கள்
நன்மையான(தைக் கற்றுக் கொண்டு செயல் படுத்துவதில் அதிக ஆர்வமுடையவர்களாக
இருந்தார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள் 'அவன் பெரும் பொய்யனாக
இருந்தாலும் அவன் உம்மிடம் உண்மையைத்தான் சொல்லியிருக்கிறான்! மூன்று
இரவுகளாக நீர் யாரிடம் பேசி வருகிறீர் என்று உமக்குத் தெரியுமா? என்று
கேட்டனர். 'தெரியாது' என்றேன். 'அவன்தான் ஷைத்தான்!' என்று
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

Volume :2 Book :40

3275. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

ரமளானுடைய ஸகாத் பொருளைப் பாதுகாத்திடும் பொறுப்பை இறைத்தூதர்(ஸல்)
அவர்கள் என்னிடம் ஒப்படைத்தார்கள். அப்போது (இரவில்) ஒருவன் வந்து அந்த
(ஸகாத்) உணவுப் பொருளை அள்ளலானான். உடனே, நான் அவனைப் பிடித்துக்
கொண்டேன்; 'உன்னை அல்லாஹ்வின் தூதரிடம் இழுத்துச் சென்று முறையிடுவேன்'
என்று கூறினேன். (அறிவிப்பாளர் முழு நிகழ்ச்சியையும் விபரமாகச்
சொல்கிறார்..) இறுதியில் அவன், 'நீங்கள் படுக்கைக்குச் செல்லும்போது
ஆயத்துல் குர்ஸீயை ஓதுங்கள். (அவ்வாறு ஓதினால்) உங்களுடன் பாதுகாவலர்
(வானவர்) ஒருவர் இருந்து கொண்டேயிருப்பார். காலை நேரம் வரும் வரை
ஷைத்தான் உங்களை நெருங்க மாட்டான்' என்று என்னிடம் சொன்னான். (இதை
நபி(ஸல்) அவர்களிடம் சொன்னபோது,) 'அவன் பொய்யனாயிருந்தும், உங்களிடம்
உண்மை பேசியுள்ளான். அவன் ஷைத்தான் தான்' என்று கூறினார்கள்.

Volume :3 Book :59

5010. முஹம்மத் இப்னு சீரீன்(ரஹ்) அறிவித்தார்

அபூ ஹுரைரா(ரலி), 'இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ரமளானின் (ஃபித்ரா) ஸகாத்தைப்
பாதுகாக்கும் பொறுப்பை என்னிடம் ஒப்படைத்தார்கள். அப்போது யாரோ ஒருவன்
என்னிடம் வந்து அந்த (ஸகாத்) உணவுப் பொருளை அள்ளலானான். உடனே அவனை நான்
பிடித்து, 'உன்னை இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் கொண்டு செல்லப் போகிறேன்'
என்று சொன்னேன்' என்று கூறிவிட்டு, - அந்த நிகழ்ச்சியை முழுமையாகக்
குறிப்பிட்டார்கள். - (இறுதியில், திருட வந்த) அவன், 'நீங்கள்
படுக்கைக்குச் செல்லும்போது (ஆயத்துல் குர்ஸீ'யை ஓதுங்கள்! (அவ்வாறு
செய்தால்,) விடியும்வரை அல்லாஹ்வின் தரப்பிலிருந்து (உங்களைப்
பாதுகாக்கின்ற) காவலர் (வானவர்) ஒருவர் இருந்துகொண்டேயிருப்பார்; எந்த
ஷைத்தானும் உங்களை நெருங்கமாட்டான்' என்று கூறினான். (இதை நான் நபி(ஸல்)
அவர்களிடம் தெரிவித்தேன்). அப்போது நபியவர்கள், 'அவன் பெரும்
பொய்யானாயிருப்பினும அவன் உம்மிடம் உண்மையாகத்தான் சொல்லியிருக்கிறான்;
(உம்மிடம் வந்த) அவன்தான் ஷைத்தான்' என்று கூறினார்கள் என்றும்
கூறினார்கள். 35 Volume :5 Book :66

மூலம்: http://www.faithbrowser.com/ayat-al-kursi-by-courtesy-of-satan/

________________________________

ஃபெயித் ப்ரவுசர் தள இதர கட்டுரைகள்

உமரின் கட்டுரைகள் பக்கம்

Source: https://www.answering-islam.org/tamil/authors/umar/faith_browser/ayat-al-kursi-by-courtesy-of-satan.html


Source : http://isakoran.blogspot.in/

August 11, 2016

முஹம்மதுவின் செய்தி, பரிசுத்த பவுலடியாரின் செய்தி – சாட்சிகள் எங்கே?

ஞாயிறு, 27 மார்ச், 2016

முஹம்மதுவின் செய்தி, பரிசுத்த பவுலடியாரின் செய்தி – சாட்சிகள் எங்கே?

(2016ம் ஆண்டின் – இயேசு உயிர்த்தெழுந்த நாள் சிறப்புக் கட்டுரை)

முன்னுரை: இன்று 2016ம் ஆண்டு, மார்ச் மாதம் 27ம் தேதி, நான்
திருச்சபையில் ஆராதனையில் உட்கார்ந்து இருந்தேன். இன்று உலகமெங்கும்
கிறிஸ்தவர்கள் இயேசுவின் உயிர்த்தெழுந்த நாளை நினைவு கூறுகிறார்கள். என்
சபையின் போதகர் இன்று 1 கொரிந்தியர் 15ம் அத்தியாயத்திலிருந்து பிரசங்கம்
செய்தார். அப்போது எனக்கு தோன்றிய ஒரு முக்கியமான விஷயத்தைப் பற்றி
சுருக்கமாக இந்த கட்டுரையில் எழுதவுள்ளேன்.

இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவத்தின் அஸ்திபாரங்கள் என்ன? முஹம்மதுவின்
நபித்துவத்திற்கு சாட்சி யார்? பவுலடியாரின் சீஷத்துவத்திற்கு சாட்சி
யார்? இந்த இரண்டு கேள்விகள் இக்கட்டுரையில் கேட்கப்பட்டு ஆய்வு
செய்யப்படுகிறது.


1) முஹம்மது பற்றிய கிறிஸ்தவர்களின் நிலைப்பாடு

முஸ்லிம்கள் முஹம்மது என்பவரை தீர்க்கதரிசியாக (இறைத்தூதராக)
கருதுகிறார்கள், இவர்களின் நம்பிக்கைக்கு ஆதாரம் குர்-ஆன் ஆகும்.
கிறிஸ்தவர்கள் முஹம்மதுவை ஒரு "கள்ளத் தீர்க்கதரிசி" என்று
நம்புகிறார்கள், இவர்களின் நம்பிக்கைக்கு ஆதாரம் பைபிள் ஆகும்.

முஹம்மதுவை ஒரு தீர்க்கதரிசியாக கிறிஸ்தவர்கள் ஏற்றுக் கொள்ளவேண்டும்
என்று முஸ்லிம்கள் பெரும் முயற்சி எடுக்கிறார்கள், ஆனால், அவர்களால்
வெற்றிப்பெற முடிவதில்லை. சில முஸ்லிம் அறிஞர்கள், பைபிளின்
அடிப்படையிலேயே முஹம்மதுவின் நபித்துவத்தை நிருபிக்க இமாலய முயற்சி
எடுக்கிறார்கள், ஆனால், அதுவும் தோல்வி அடைகிறது.

பைபிளின் படி, முஹம்மது ஒரு பொய் தீர்க்கதரிசி ஆவார். இயேசுவின்
போதனைகளின் படியும், அப்போஸ்தலர்களின் போதனைகளின் படியும், முஹம்மது ஒரு
பொய்யராவார்.

2) பரிசுத்த பவுலடியார் பற்றிய முஸ்லிம்களின் நிலைப்பாடு

புதிய ஏற்பாட்டின் படி, பவுலடியார் ஒரு அப்போஸ்தலர் ஆவார். இயேசுவின்
சீடர்களாகிய பரிசுத்த பேதுரு, யோவான் போன்ற வரிசையில், பவுலடியாரையும்
கிறிஸ்தவம் "அப்போஸ்தலர்" என்று அழைக்கிறது. ஆனால், முஸ்லிம்களின் படி,
"பவுலடியார் ஒரு கள்ள சீடர், இயேசு போதிக்காதவற்றை போதித்தவர்". மேலும்,
"இயேசு தாம் ஒரு தீர்க்கதரிசி மட்டுமே என்று போதித்தார், ஆனால், பவுல்
வந்து இதனை மாற்றி, இயேசு தேவகுமாரன் என்றும், இயேசுவிற்கு
தெய்வீகத்தன்மை உண்டு என்றும் போதித்தார்" என்று முஸ்லிம்கள் பரிசுத்த
பவுலடியார் மீது குற்றம் சுமத்துகிறார்கள்.

ஒரு சராசரி மனிதன் புதிய ஏற்பாட்டை படிப்பாரானால், முஸ்லிம்களின்
மேற்கண்ட நிலைப்பாட்டில் உள்ள பிழைகளை சுலபமாக கண்டுபிடிப்பார். இந்த
சவாலை ஏற்கவிரும்பும் முஸ்லிம்கள் புதிய ஏற்பாட்டை படிக்க இன்று முதல்
ஆரம்பிக்கட்டும்.

3) கிறிஸ்தவத்தின் அஸ்திபாரமாகிய இயேசுவின் உயிர்த்தெழுதல் பற்றிய
பரிசுத்த பவுலையாரின் போதனைகளுக்கு சாட்சிகள் உண்டா?

கிறிஸ்தவத்தின் அஸ்திபாரம் இயேசுவின் உயிர்த்தெழுதல் ஆகும். இதனை
சுருக்கமாக பரிசுத்த பவுலடியார், கொரிந்திரருக்கு எழுதிய நிருபத்தில்
எழுதுகிறார்.

1 கொரிந்தியர் 15:14

15:14 கிறிஸ்து எழுந்திருக்கவில்லையென்றால், எங்கள் பிரசங்கமும் விருதா,
உங்கள் விசுவாசமும் விருதா.


மேற்கண்ட வசனத்தில் "கிறிஸ்தவத்தின் நம்பிக்கை" இயேசுவின்
உயிர்த்தெழுதலில் அடங்கியுள்ளது என்பதை பரிசுத்த பவுலடியார்
குறிப்பிடுகிறார். 1 கொரிந்தியர் 15ம் அத்தியாயத்தை முழுவதுமாக
படிக்கவும், நான் இங்கு சில வசனங்களை மட்டும் மேற்கோள் காட்டுகிறேன்.

இயேசுவின் உயிர்த்தெழுதலுக்கு யார் சாட்சிகள்? இதனை மக்கள் நம்புவது எப்படி?

பவுலையார் ஒருவர் மட்டும் இயேசுவின் உயிர்த்தெழுதலுக்கு சாட்சியாக
இருந்திருந்தால், முஸ்லிம்களின் நிலைப்பாட்டில் நியாயம் இருக்கிறது என்று
நாம் கருதலாம். ஆனால், இயேசுவின் உயிர்த்தெழுதலுக்கு அவரது உள்வட்ட
சீடர்கள் தான் முதலாவது சாட்சிகள் என்று பவுலடியார் குறிப்பிடுகிறார்,
இதனை வரிசைப்படுத்தி எழுதுகிறார், இதனை இப்போது படியுங்கள்:

1 கொரிந்தியர் 15:3 - 8


15:3 நான் அடைந்ததும் உங்களுக்குப் பிரதானமாக ஒப்புவித்ததும்
என்னவென்றால், கிறிஸ்துவானவர் வேதவாக்கியங்களின்படி நமது பாவங்களுக்காக
மரித்து,
15:4 அடக்கம்பண்ணப்பட்டு, வேதவாக்கியங்களின்படி மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்து,
15:5 கேபாவுக்கும், பின்பு பன்னிருவருக்கும் தரிசனமானார்.
15:6 அதன்பின்பு அவர் ஐந்நூறுபேருக்கு அதிகமான சகோதரருக்கும்
ஒரேவேளையில் தரிசனமானார்; அவர்களில் அநேகர் இந்நாள்வரைக்கும்
இருக்கிறார்கள், சிலர் மாத்திரம் நித்திரையடைந்தார்கள்.
15:7 பின்பு யாக்கோபுக்கும், அதன்பின்பு அப்போஸ்தலரெல்லாருக்கும் தரிசனமானார்.
15:8 எல்லாருக்கும் பின்பு, அகாலப்பிறவிபோன்ற எனக்கும் தரிசனமானார்.


இயேசுவின் உயிர்த்தெழுதல் பற்றி பவுலடியார் போதனை செய்துள்ளார்,
உயிர்த்தெழுந்த இயேசுவை முதலாவது கண்டவர் பவுலடியார் ஆவாரா? இல்லை! இவர்
உயிர்த்தெழுந்த இயேசுவை கடைசியாக கண்டவர் ஆவார்.

மேலேயுள்ள வசனங்களை கவனிக்கும் போது, உயிர்தெழுந்த இயேசுவானவர்:

அ) பேதுருவிற்கு காணப்பட்டார்
ஆ) இதர சீடர்களுக்கு காணப்பட்டார்
இ) அதன் பின்பு, ஐந்நூறு பேருக்கும் அதிகமானவர்களுக்கு காணப்பட்டார்
ஈ) கடைசியாக, பவுலடியாருக்கு காணப்பட்டார்.


இயேசுவின் சீடர்களில் சிலரும், அந்த ஐந்நூறு பேர்களில் பலரும் இந்த
நிருபத்தை பவுலடியார் எழுதிய போது உயிரோடு இருந்துள்ளார்கள்.
அக்காலக்கட்டத்தில், பவுலடியாரின் போதனையின் நம்பகத்தன்மையை சரி பார்க்க
விரும்புகிறவர்கள், உயிரோடு இருந்த இதர சீடர்களிடம் கேட்டு தெரிந்துக்
கொள்ளலாம். உயிர்த்தெழுந்த இயேசுவை பார்த்தவர்களில் பவுலடியார் தம்மை
"கடைசியாக குறிப்பிடுகிறார்" என்பதை கவனிக்கவும்.

பரிசுத்த பவுலையார் பொய் சொல்கிறார் என்று முஸ்லிம்கள் கூறுவார்களானால்,
முதலாவது அவர்கள் இயேசுவின் முக்கிய சீடர்களாகிய பேதுரு, யோவான் போன்ற
சீடர்களைத் தான் குற்றப்படுத்த வேண்டும். மேலும் இதர 500 சீடர்களை
குற்றப்படுத்தவேண்டும். இந்த வசனத்தில் "நாங்கள்" என்று பவுலடியார்
குறிப்பிடுவது, இயேசுவின் சீடர்களையும் சேர்த்துத் தான்.

1 கொரிந்தியர் 15:15 மரித்தோர் உயிர்த்தெழாவிட்டால், தேவன் எழுப்பாத
கிறிஸ்துவை அவர் எழுப்பினாரென்று நாங்கள் தேவனைக்குறித்துச்
சாட்சிசொன்னதினாலே, தேவனுக்காகப் பொய்ச்சாட்சி சொல்லுகிறவர்களாகவும்
காணப்படுவோமே.



ஆனால், இயேசுவின் இந்த சீடர்கள் பற்றி 7ம் நூற்றாண்டில் வந்த குர்-ஆன்
என்ன சொல்கிறது? இச்சீடர்கள் பொய் சொல்பவர்கள் என்றோ, இவர்களின்
விசுவாசம் கெடுக்கப்பட்டுவிட்டதென்றோ சொல்கிறதா? குர்-ஆன் வசனத்தைப்
பாருங்கள்:

குர்-ஆன் 61:14. ஈமான் கொண்டவர்களே! மர்யமின் குமாரர் ஈஸா (தம்) சீடர்களை
நோக்கி, "அல்லாஹ்வுக்காக எனக்கு உதவி செய்வோர் யார்?" எனக் கேட்க,
சீடர்கள், "நாங்கள் அல்லாஹ்வின் உதவியாளர்களாக இருக்கின்றோம்" என்று
கூறியதுபோல், நீங்கள் அல்லாஹ்வின் உதவியாளர்களாக ஆகிவிடுங்கள் - எனினும்,
இஸ்ராயீல் மக்களில் ஒரு கூட்டம் ஈமான் கொண்டது; பிறிதொரு கூட்டமோ
நிராகரித்தது; ஆகவே ஈமான் கொண்டவர்களுக்கு, அவர்களுடைய பகைவர்களுக்கு
எதிராக உதவி அளித்தோம் - அதனால் அவர்கள் வெற்றியாளராய் ஆகிவிட்டார்கள்.
(முஹம்மது ஜான் தமிழாக்கம்)


இந்த வசனத்தில் வரும் "அவர்கள் வெற்றியாளராய் ஆகிவிட்டார்கள்" என்பது
இயேசுவின் சீடர்களைத் தான் குறிக்கும். இந்த வசனம் இறக்கப்பட்டது 7ம்
நூற்றாண்டில், இயேசுவின் சீடர்களும் பவுலடியாரும் வாழ்ந்த காலம் முதலாம்
நூற்றாண்டாகும். இந்த வசனத்தின் படி, வெற்றியாளர்களாக அல்லாஹ் மாற்றியது
முதல் நூற்றாண்டில் வாழ்ந்த கிறிஸ்தவர்களாகிய இயேசுவின் சீடர்கள் மற்றும்
பவுலடியாரைத் தான். மேலும் இவர்களின் போதனைகளின் படி வாழ்ந்த
கிறிஸ்தவர்களைத் தான்.

இதுவரை கண்ட விஷயங்களின் படி, பரிசுத்த பவுலடியாரின் போதனைகளுக்கு
முதலாவது சாட்சிகள், ஐந்நூறுக்கும் அதிகமாக இயேசுவின் சீடர்கள் ஆவார்கள்.

பரிசுத்த பவுலடியாரின் செய்திக்கு இன்னொரு ஆதாரத்தையும் இயேசு
கொடுத்திருந்தார், அது "அற்புதங்களும் அடையாளங்களுமாகும்". இறைவன் தன்
இறைத்தூதர்களை அனுப்பும் போது, மக்கள் நம்பிக்கை கொள்வதற்காக,
அற்புதங்களைச் செய்யும் அதிகாரத்துடன் அனுப்புவார். இதனை பழைய ஏற்பாட்டு
தீர்க்கதரிசிகளாகிய மோசே முதற்கொண்டு, இயேசுவின் அப்போஸ்தலர் பவுலடியார்
வரை நாம் பரவலாக காணலாம். பவுலடியார் மூலமாக இயேசு செய்த அற்புதங்களை காண
புதிய ஏற்பாட்டின் அப்போஸ்தல நடபடிகள் புத்தகத்தை படிக்கவும்.

சுருக்கமாக சொல்வதென்றால், இயேசுவின் உயிர்த்தெழுதல் கிறிஸ்தவத்தின்
அஸ்திபாரம் ஆகும், இதனை இயேசுவின் சீடர்களோடு கூட சேர்ந்து, பவுலடியாரும்
போதனை செய்துள்ளார். பவுலடியாரின் போதனைகளுக்கு இராண்டு வகையான சாட்சிகளை
ஆதாரங்களை தேவன் கொடுத்திருந்தார். முதலாவது ஆதாரம், உயிர்த்தெழுந்த
இயேசுவைக் கண்ட ஐந்நூறுக்கும் அதிகமான சீடர்கள், இரண்டாவது ஆதாரம்,
பவுலடியார் மூலமாக இயேசு செய்த அற்புதங்கள் ஆகும். இவ்விவரங்கள்
முஸ்லிம்களின் பவுலடியார் பற்றிய குற்றச்சாட்டை
தவிடுபொடியாக்கிவிடுகிறது.

இப்போது, முஹம்மதுவின் செய்திக்கு என்ன சாட்சிகளை அல்லாஹ் கொடுத்துள்ளான்
என்பதை சுருக்கமாக பார்ப்போம்.

4) இஸ்லாமின் அஸ்திபாரமாகிய முஹம்மதுவின் நபித்துவமும், மற்றும்
குர்-ஆனின் நம்பகத்தன்மையை நிருபிக்கும் சாட்சிகளும்

இஸ்லாமின் முதலாவது அஸ்திபாரம் "முஹம்மதுவின் நபித்துவம் ஆகும்",
இரண்டாவது அஸ்திபாரம் குர்-ஆன் ஆகும். முஹம்மதுவின் நபித்துவத்தின்
வெளிப்பாடு தான் குர்-ஆன். குர்-ஆனில் உள்ளவைகளை முஹம்மது போதித்தார்.
குர்-ஆனில் இல்லாதவைகளையும் முஹம்மது போதித்தார், அதனை ஹதீஸ்கள் என்று
கூறுவார்கள்.

பரிசுத்த பவுலடியாரின் "அப்போஸ்தலத்துவத்தையும், செய்தியையும் மேலே ஆய்வு
செய்தது போல, முஹம்மதுவின் நபித்துவத்தையும், செய்தியையும் ஆய்வு
செய்வோம்".

அ) முஹம்மது ஒரு இறைத்தூதர் என்றுச் சொல்வதற்கு என்ன ஆதாரம் இருக்கிறது?
ஆ) குர்-ஆன் இறைவேதம் என்றுச் சொல்வதற்கு என்ன ஆதாரம் இருக்கிறது?


இந்த கேள்விகளை நாம் முஸ்லிம்களிடம் கேட்டால்,

முஹம்மது இறைத்தூதர் என்று குர்-ஆன் சொல்கிறது என்று முதலாவது கேள்விக்கு
பதில் சொல்வார்கள்.
குர்-ஆன் இறைவேதம் என்று முஹம்மது சொல்கிறார் என்று இரண்டாவது கேள்விக்கு
பதில் சொல்வார்கள்.


இது எப்படிப்பட்ட வேடிக்கையாக இருக்கிறது என்று பாருங்கள்.
முஹம்மதுவிற்கு குர்-ஆன் சாட்சி, குர்-ஆனுக்கு முஹம்மது சாட்சி.
இவ்விரண்டிற்கு வெளியே இஸ்லாமில் எந்த ஒரு ஆதாரமும் இல்லை. இஸ்லாம்
இறைவனால் (பைபிளின் தேவனால்) கொண்டுவரப்பட்ட மார்க்கம் என்றுச்
சொல்வதற்கு, எந்த ஒரு ஆதாரத்தையும் இஸ்லாம் கொடுப்பதில்லை. பைபிளின்
தீர்க்கதரிசிகளுக்கு தேவன் கொடுத்து அனுப்பியது போல, எந்த ஒரு அற்புதமும்
முஹம்மதுவிற்கு கொடுக்கப்படவில்லை.

பரிசுத்த பவுலடியாருக்கு முன்னோடிகளாக, இயேசுவின் சீடர்கள் இருந்தார்கள்,
பவுலடியாரின் செய்தியை சரி பார்க்கும் உரைக்கற்களாக அப்போஸ்தலர்கள்
இருந்தார்கள். ஆனால், முஹம்மதுவின் செய்தியை பரிசோதிக்க, இயேசுவிற்கு
பிறகு முஹம்மதுவிற்கு முன்பு, எந்த ஒரு தீர்க்கதரிசியும் இல்லை, இதனை
இஸ்லாமே சொல்கிறது. முஹம்மதுவின் செய்தியின் நம்பகத்தன்மையை சரிப்பார்க்க
இருந்த ஒரே ஆதாரம் பைபிள் தான். இதனை குர்-ஆன் பல இடங்களில்
சொல்லியுள்ளது, முந்தைய வேதங்களை மெய்ப்பிக்க குர்-ஆன் வந்தது என்றுச்
சொல்லும் குர்-ஆன் வசனங்களே, பைபிளை நீதிபதியின் இருக்கையில்
அமர்த்திவிட்டு, குற்றவாளி கூண்டில் தன்னை நிறுத்திக்கொண்டது. எந்த
பைபிளை நிருபிக்க குர்-ஆன் வந்ததோ, அந்த பைபிளுக்கு எதிராக குர்-ஆன்
போதனை செய்துள்ளது.

ஆக, இஸ்லாமின் முதலாவது அஸ்திபாரமாகிய "முஹம்மதுவின் நபித்துவத்தை"
நிருபிக்கும் ஆதாரம் இஸ்லாமிடம் இல்லை என்பதை இதன் மூலம் அறியலாம்.

இரண்டாவதாக, பரிசுத்த பவுலடியாரின் மூலமாக இயேசு செய்த அற்புதங்களைப்போல,
ஒரு அற்புதத்தையும் முஹம்மது மூலமாக அல்லாஹ் செய்யவில்லை. வியாதிகளை
குணமாக்குவது, மரித்தவர்களை உயிரோடு எழுப்புவது போன்ற அற்புதங்கள்
ஒன்றையும் முஹம்மது செய்து தன் "நபித்துவத்தையும், குர்-ஆன் இறைவேதம்
தான்" என்பதையும் நிருபித்துக் கொள்ளவில்லை.

முடிவுரை: இச்சிறிய கட்டுரையில், கிறிஸ்தவத்தின் அஸ்திபாரமாகிய
"இயேசுவின் உயிர்த்தெழுதல் பற்றி பவுலடியாரின் செய்தியைப் பற்றிப்
பார்த்தோம்". தன் செய்திக்கு சாட்சிகளை பவுலடியார் கோர்வையாக
கொடுத்துள்ளதை, 1 கொரிந்தியர் 15ம் அத்தியாயத்திலிருந்து எடுத்துக்
காட்டினோம். பழைய ஏற்பாட்டின் படி, ஒரு வழக்கிற்கு இரண்டு சாட்சிகள்
தேவைப்படுகிறது, ஆனால், இயேசுவின் உயிர்த்தெழுதலுக்கு 500க்கும்
அதிகமானோரின் சாட்சி இருப்பதைக் கண்டோம்.

இதே போல, இஸ்லாமின் அஸ்திபாரமாகிய முஹம்மதுவின் நபித்துவம் மற்றும்
குர்-ஆன் பற்றி என்னென்ன ஆதாரங்களை இஸ்லாம் கொடுத்துள்ளது என்று ஆய்வு
செய்யும் போது, நமக்கு எந்த ஒரு சாட்சியும் கிடைக்கவில்லை.
முஹம்மதுவைப்போல கள்ளத்தீர்க்கதரிசிகள் அனேகர் எழும்புவார்கள், தங்கள்
போதனைகளை ஒரு புத்தகமாக மாற்றி, இது தான் இறைவேதம் என்றுச் சொல்வார்கள்.
நீ ஒரு இறைத்தூதர் என்பதற்கு என்னய்யா ஆதாரம் என்று கேட்டால்,
புத்தகத்திற்கு நேராக தங்கள் விரலை நீட்டுவார்கள். இந்த புத்தகம்
இறைவேதம் தான் என்பதற்கு என்ன ஆதாரம் என்று கேட்டால், இறைத்தூதர் நான்
சொல்கிறேன் என்றுச் சொல்வார்கள். ஏதாவது அற்புதம் செய்து உம்
நபித்துவத்தை நிருபியுங்கள் என்று கேட்டால், இந்த புத்தகம் தான் என்
அற்புதம் என்றுச் சொல்வார்கள். இப்படிப்பட்டவரை முஸ்லிம்கள் நபி என்று
நம்புவார்களா? நிச்சயமாக இல்லை, இதே போலத்தான் கிறிஸ்தவர்களும்
முஹம்மதுவை தீர்க்கதரிசி என்று நம்புவதில்லை.

குர்-ஆனின் இலக்கிய நடை "அது இறைவேதம் என்பதற்கு ஆதாரம்" என்று
முஸ்லிம்கள் சொன்னால், திருக்குரளும், இதர பண்டைய இலக்கியங்களும்
குர்-ஆனை மிஞ்சும் இலக்கிய நடையில் இருப்பதை இவர்கள் கவனிக்க
தவறுகிறார்கள் என்று அர்த்தம். மேலும், குர்-ஆன் இறைவேதம் என்று எண்ணும்
முஸ்லிம்கள், இதர மொழி/தமிழ் இலக்கியங்களையும் இறைவேதம் என்று
நம்பவேண்டும்.

குர்-ஆன் சொல்லும் செய்தி வேறு நூலில் இல்லை என்று முஸ்லிம்கள் சொன்னால்,
இது மிகப்பெரிய பொய்யாகும். நான் சவால் விடுகிறேன், குர்-ஆனை விட
கருத்தில், கட்டளைகளில் மேன்மையுள்ள நூல்கள் உலகில் அனேகம் உள்ளன.
உண்மையைச் சொல்லவேண்டுமென்றால், தரத்தில் குர்-ஆனின் சில கட்டளைகள்
மிகவும் கேவலமானதாகவும், சமுதாயத்திற்கு கேடு விளைவிக்கும்
கட்டளைகளாகவும் இருக்கின்றன (உதாரணத்திற்கு, ஒரு முஸ்லிம் நான்கு
திருமணங்களைச் செய்ய குர்-ஆன் அனுமதிப்பதையும், அடிமைப்பெண்களோடு
விபச்சாரம் புரிவதை குர்-ஆன் அனுமதிப்பதையும் சொல்லலாம்.)

ஆக, இயேசு உயிர்த்தெழுந்த நாளை கிறிஸ்தவர்கள் நினைவு கூறும் இந்த நாளில்,
முஹம்மதுவின் நபித்துவம், பவுலின் அப்போஸ்தலத்துவத்திற்கு முன்பாக
மண்டியிட்டுள்ளதை காணமுடிகின்றது. அருமையான அப்போஸ்தலர்களை கொடுத்த
இயேசுவையும், இவ்வப்போஸ்தலர்கள் செய்த ஊழியத்தையும் பார்த்து நாங்கள்
பிரமிக்கிறோம். இயேசுவை துதிக்கிறோம். அவர் உயிர்த்தெழுந்தது போல,
எங்களையும அவரது வருகையில் உயிர்ப்பிப்பார் என்ற விசுவாசத்துடன்,
உவ்வுலகப் பயணத்தை தைரியத்துடன் தொடருகிறோம்.

Source: http://www.isakoran.blogspot.in/2016/03/blog-post_27.html

Posted by Isa Koran at ஞாயிறு, மார்ச் 27, 2016


--
Source : http://isakoran.blogspot.in/